எட்டையாபுரம் 11வது வார்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.