கவுண்டன்பட்டி கிராமத்தில் ரூபாய் 14, லட்சத்தி 31,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 14,31,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிட கட்டுமான பணியை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி, புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார் வெங்கடாசலம், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.