தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பல்லாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 28 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலர் சரளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்டின், மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.