விளாத்திகுளம் அருகே விட்டிலாபுரத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரம் ஊராட்சி, விட்டிலாபுரம் கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.00-லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். நிகழ்வில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், ஓட்டப்பிடாரம் துணை ஒன்றிய பெருந்தலைவர் காசிவிஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன்,கிரி பள்ளி தலைமை ஆசிரியை சுதாவடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,  மீனாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரிகணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.