விளாத்திகுளம் அருகே குளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து வழித்தடத்தை  எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து விளாத்திகுளம்- குளத்தூர் வழியாக முத்துக்குமராபுரம் வரை சென்ற அரசு பேருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்று T.சுப்பையாபுரம் வழியாக முத்துராமலிங்கபுரம் வரை நீட்டிப்பு செய்து,குளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து முத்துக்குமராபுரம் வழியாக முத்துராமலிங்கபுரம் செல்வதற்கு புதிய வழித்தட பேருந்து சேவையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடி அசைத்து  தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கினர்.இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,குருநாதன் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலதிசெல்வபாண்டி,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.