தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈராச்சி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 38 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம் உள்ளிட்ட 3 பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜகவர், கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.