இசை மகா சமுத்திரம் எனும் இசை மாமேதைகளாலும் அறிஞர்களால் போற்றப்பட்ட, விளாத்திகுளம் நல்லப்ப சுவாமி அவர்களின் 60வது நினைவு குருபூஜை விழாவை முன்னிட்டு, இசை மாமேதை நல்லப்ப சாமியின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவருள்வாய் சிலைக்கு மற்றும் அவரது நினைவு ஸ்துபியில் உள்ள திருவுருவப்படத்திற்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில் வரலாற்று நூலாசிரியர் NAS சிவகுமார், நல்லப்பசாமியின் வாரிசுதாரர்களான பால்ராஜ், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருதுநகர் மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன், மற்றும் இசை ஆர்வலர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.