தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட300- குடும்பங்களுக்கு JSW- நிறுவனம் சார்பாக நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் முத்துராஜ்,கொல்லம்பரும்பு ஊராட்சி மன்ற தலைவர் கௌரி கருணாகரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.