விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 238 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய MLA மார்க்கண்டேயன்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் மேல்நிலை பயிலும் 238  மாணவ மாணவியர்களுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகளை,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார், அதற்கு முன்னதாக மாணவர்கள்  பயன்பெறும் வகையில் கயிறு ஏறும் உபகரணத்தை திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தவசிமுத்து உடற்கல்வி இயக்குனர் பால்ச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.