விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.தமிழகம் முழுவதும் இன்று உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் குறைகளை கேட்டறிந்து,தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினார், இந்நிகழ்வில் தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பாண்டி, எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, சமூக பாதுகாப்புத் துறை வட்டாட்சியர் ரகுபதி, விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி  மற்றும் அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.