தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சி பகுதிகளில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீத கண்ணன் மற்றும் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரனாராயணன், திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.