தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தை சுற்றிலும் 3000- மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கொல்லம்பரும்பு ஊராட்சி மன்ற தலைவர் கௌரிகருணாகரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,சந்திரகிரி ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி சந்தானராஜ், முள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, T.சுப்பையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பு வீரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லெக்கம்மாள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானூர் கலந்து கொண்டனர்.