தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தையும், வேம்பார் தெற்கு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 9 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.