தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில்  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்  ரூபாய் 14 லட்சத்தி  31,000 ஆயிரம்  மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். அதற்கு முன்னதாக தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூபாய் 4 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள  72 குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், வெங்கடாசலம் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.