பேரிலேவன்பட்டி கிராமத்தில் அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் மஹா மண்டபத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் திறந்து வைத்தார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலேவன்பட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் இந்து நாடார் உறவின்முறை மற்றும் திருப்பணி குழு சார்பாக கட்டப்பட்டுள்ள மகா மண்டபத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் திருமதி அனிட்டா, தொழிலதிபர் செல்வகுமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மற்றும் கிராம பொதுமக்கள் கட்சியின் நிர்வாகிகள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.