புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே புதிய பயணியர்  நிழற்குடை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ்,மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டி, வார்டு உறுப்பினர் வெற்றிவேலன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.