தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக விவசாய நிலங்கள், கால்நடைகள், வீடுகள் ஆகியவை பெரிதும் சேதம் அடைந்து  மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்புக்கு ஏற்றார் போல் நிவாரண தொகை அறிவித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்  மக்கள் பிரதிநிதி மூலமாக நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்கள் 108 நபர்களுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தலா பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், திமுக ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்  இம்மானுவேல் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானுடன் இருந்தனர்.