தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கீழ ஈரால்   கிராமத்தில் தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக  வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர். அரசு சார்பில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அறக்கட்டளை சார்பாக 100 குடும்பங்களுக்கு அரிசி மற்றும்  உணவுப் பொருட்கள் அடங்கிய  தொகுப்புகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அறக்கட்டளை  இயக்கத்தினர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.