விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை -VOC செவல் கிராமத்தில் வீடு இடிந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை -VOC செவல் கிராமத்தை சேர்ந்த அழகுபாண்டி என்பவரின் வீடு தொடர் கனமலையின் காரணமாக குடியிருந்த வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  இடிந்த வீட்டை நேரில் ஆய்வு செய்து, வீட்டின் உரிமையாளர் அழகுபாண்டி குடும்பத்தினருக்கு நிதிஉதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார், இந்நிகழ்வில் மேல்மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிக முத்தையாசாமி, ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் மாரீஸ்வரி வேல்முருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.