விளாத்திகுளம் அருகே கீழ ஈரால் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் நுண்கதிர்வீச்சு மையத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் JSW நிறுவனம் சார்பில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடத்தையும், ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் நுண்கதிர்வீச்சு மையத்தையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செல்வி, மருத்துவமனை ஊழியர்கள், கீழஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சைபாண்டியன், சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மருத்துவ ஊழியர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.