தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 39 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் துணை சுகாதார மைய கட்டிட கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார்,விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்,கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.