நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளுக்கான அம்ரூத் 2.0 திட்டத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல்,திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.