கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரமுகர்கள் தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட340 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.