விளாத்திகுளம் அருகே அயன் வடமலாபுரம் கிராமத்தில் 200 பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் வடமலாபுரம் கிராமத்தில் கம்மவர் அறக்கட்டளை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 200 பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி அன்புராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.