தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார் (7) வயது சிறுவன் என்பவர் கடந்த 10- 01-2023 புதன்கிழமை அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணி ராபர்ட் கென்னடி என்பவரின் மகன் தாமஸ் அற்புத ரகசியம் (19) என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இதனை அடுத்து தாமஸ் அற்புத ரகசியத்தை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனை அடுத்து உயிரிழந்த அஸ்வின் குமார் குடும்பத்தாரை 18-01-2024 வியாழக்கிழமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.