விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29 கிராம் ஊராட்சிகளுக்கு மின்கல வண்டிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டையின் கொடிய அசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 29 கிராம ஊராட்சிகளுக்கு,  தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு, ரூபாய் 94 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்கல வண்டிகளை ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,சீனிவாசன் ,மற்றும் 29 கிராம ஊராட்சி மன்ற தலைவர் என,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.