ராமச்சந்திராபுரம் கிராமத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பஞ்சாயத்து உட்பட்ட ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மக்களின் குறைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேட்டறிந்தார். அக்கிராம மக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேனிடம் மழைக்காலங்களில்  மழைநீர் தேங்கி  பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம் எனவே மழைநீர் தேங்குவதை  சரி செய்ய வேண்டும் என்று ராமச்சந்திராபுரம் கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர். மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.