எட்டயபுரத்தில் லாரி மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம்-நடுவர்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் சங்கர் (48) சங்கர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இந்நிலையில்   எட்டையாபுரம் சிங்கப்பூர் காம்ப்ளக்ஸ் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி  மோதி விபத்துக்குள்ளானதில், சங்கர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர்  சங்கரை 108 வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக சங்கர் உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர்  குறுக்குச்சாலை கக்ரம்பட்டி பகுதியை சேர்ந்த  தேவபிச்சை என்பவரின் மகன் மாரிமுத்து (34) என்பவரை பிடித்து எட்டயபுரம் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.