விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தில் பாய் வியாபாரி மர்மமான முறையில் மரணம். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த கொம்பையா என்பவரின் மகன் கருப்பசாமி (45) ,கருப்பசாமி இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராக சென்று பாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் பாய் வியாபாரம் செய்வதற்கு விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தில் பாய் வியாபாரத்தை முடித்துவிட்டு சிந்தலக்கரை கிராமத்தில் உள்ள கல்யாண மண்டபத்தின் அருகே உள்ள வேப்ப மரத்தின் கீழ் படுத்து தூங்கியவர். தூங்கிய படியே இறந்ததாக சிந்தலக்கரை கிராம மக்கள் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து  கருப்பசாமியின் உடலை மீட்ட எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார், எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.