விளாத்திகுளம் அருகே குளத்தூர்-ராமச்சந்திராபுரம் கிராமத்தில் லாரி டிரைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் அழகுலிங்கம்(51) , அழகுலிங்கம் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்,  அழகுலிங்கத்திற்கும் மனைவி முத்துக்கனிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறதுஇந்நிலையில் 20-11-2023 வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மன வருத்தத்தில் இருந்த அழகுலிங்கம்  காட்டுப்பகுதியில் பூச்சிக்கொல்லை மருந்தை குடித்து மயங்க நிலையில் கிடந்துள்ளார், இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர், அழகுலிங்கத்தை  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு 108 வாகனத்தில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அழகுலிங்கம் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குளத்தூர் காவல் நிலைய போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.