தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகனான அழகு பாண்டி(51) லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கூரியம்மாள்(46) என்ற மனைவியும்,1 மகன், 1 மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கூரியம்மாள் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது கணவர் அழகு பாண்டி பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் கூரியம்மாள் வேறொரு நபருடன் தகாத உறவை கைவிடாததால் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (18.05.2024) இரவு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அழகு பாண்டி தனது மனைவியான கூரியம்மாளை கம்பால் அடித்து வீட்டில் இருந்த சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டிலேயே தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதையடுத்து இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கூரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று (19.05.2024)தனது மனைவியை சேலையால் கழுத்தை நெறித்துக் கொலை செய்த அழகு பாண்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தூத்துக்குடி பேராவூரணி சிறையில் அடைத்தனர்...
Vilathikulam
மனைவியை கொலை செய்த லாரி டிரைவர் கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026