கேரள மாநிலம் கெட்டியம் - சாத்தனூர் பகுதியை சேர்ந்த  மரிய மைக்கில்  என்பவரின் மகன் ஞானராஜ் (18),  இவர்  சாத்தனூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி. காம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாலம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு வந்துள்ளார், அப்போது அப்பகுதியில் உள்ள சக நண்பர்களுடன் சேர்ந்து மேல ஈரால் காட்டுப் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஞானராஜ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து  உடலை கைப்பற்றிய எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இல்ல நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தினை ஏற்படுத்தியது...