தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இன்றும் காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, நேரம் செல்ல, செல்ல சாரல் மழை பரவலான மழையாக பெய்ய தொடங்கியது.விளாத்திகுளம், குளத்தூர், நாகலாபுரம், வேம்பார்,எட்டையாபுரம் ,சிந்தலக்கரை , அயன் ராசாபட்டி, மேலக்கரந்தை, மாசார்பட்டி, முத்துலாபுரம் கீழக்கரந்தை, வெம்பூர் ,உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3மணி நேரத்திற்க மேலாக பரவலான மழை பெய்ததது. இதனால் கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் இன்று பெய்த மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மலையின் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது