தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு 3வது வார்டுக்குட்பட்ட காய்கறி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள உயர்மின் கோபுர மின்விளக்கு கடந்த ஒரு வார காலமாக சரிவர எரியாததால்,வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்தினை சந்தித்து வருகின்றனர். அதேபோல் விளாத்திகுளம் பேருந்து நிலையம்  பயணியர் இருக்கையறையில் உள்ள மின் விளக்குகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எரியவில்லை என்று பொதுமக்கள் மற்றும்  விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகாரர்கள்  விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் அலட்சியத்துடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.