தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் தனியார் திருமண மண்டபத்தில்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் புதூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மின் நுகர்வோர் மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் என உறுதி அளித்தனர்,   அதன்பின்னர் உதவி செயற்பொறியாளர்/விநியோகம் /விளாத்திகுளம் , உபகோட்ட பிரிவு மற்றும் துணை மின்நிலைய உதவி/இள மின் பொறியாளர்கள், புதூர், விளாத்திகுளம்,சூரங்குடி, நாகலாபுரம், ஊரகம் கோட்டம் மதிப்பீட்டு அலுவலர் மற்றும் உதவி கணக்கு அலுவலர், களப்பணியாளர்கள் மற்றும் வருவாய் பணியாளர்கள் ஆகியோருக்கு கீழ்கண்டவாறு மேற்பார்வை பொறியாளர் தூத்துக்குடி  அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது.மேலும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு நோட்டீஸ்களை மின் நுகர்வோர்களுக்கு அதிகாரிகள் வழங்கினர். நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் மற்றும் விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், மற்றும் மின்வாரிய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.