விளாத்திகுளம் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தமிழக முழுவதும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தீர்த்தடுப்பு போலியை ஒத்தியை பயிற்சி நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், விளாத்திகுளம் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு ,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சியை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.