தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் உமையகுமார் (42), உமையகுமார் விவசாய வேலை செய்து வந்துள்ளார். உமயகுமாருக்கு நெஞ்சுவலி பிரச்சனை இருந்ததாகவும் இதற்கு பல இடங்களில் மருத்துவம் செய்தும், உடல்நிலை சரியாகாததால், மன விரக்தியில் இருந்து வந்த உமையகுமார் 22-01-2024  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம்  காவல் நிலைய போலீசார் உமையகுமார் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.