எட்டையாபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈராச்சி கிராம ஆதிதிராவிட மக்கள்!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன,இப்பகுதியில் அடிப்படை பிரச்சனைகளான வாறுகால் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவை முறையாக கடந்த சில வருடங்களாக செய்து கொடுக்கவில்லை என்றும்,மேலும் இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும்,புகார் அளித்தனர்.இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லைஎன்று கூறி எட்டையாபுரம் தாலுகா அலுவலகத்தை அப்பகுதி மக்கள் மற்றும் பாஜகவினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை உடனே நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்,மேலும்  தொடர்ந்து வட்டாட்சியரிடம் கிராம மக்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முயன்றனர், அவர்களிடம் வட்டாட்சியர் மல்லிகா, காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நடத்திய பேச்சு வார்த்தையில்  கிராம மக்களின் அடிப்படை பிரச்சினை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.