தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  குருவார்பட்டி கிராமத்தை சேர்ந்த  ஜான் ஆல்பர்ட் மகன் லிவிங்ஸ்டன் தாமஸ்(52), லிவிங்ஸ்டன் தாமஸ் விளாத்திகுளம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார், இவருக்கு அடிக்கடி வயிறு வலி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறதுஇந்நிலையில் 02-02-2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  லிவிங்ஸ்டன் தாமஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனைஅடுத்து தகவல் அறிந்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், லிவிங்ஸ்டன் தாமஸ் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.