விளாத்திகுளம் அருகே தொடர் மழையின் காரணமாக 200 பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சோளம், உளுந்து, மிளகாய்வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் இந்தாண்டு  மிளகாய், சோளம், மக்காச்சோளம்,கம்பு, உளுந்து,பாசிப்பயிறு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை  இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தமிழக முழுவதும் பெய்து வரும் தொடர் மழை பெய்து வருகிறது, இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் அருகே உள்ள குமாரசக்கனாபுரம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில்  பயிரிடப்பட்டிருந்த, சோளம்,மிளகாய், உளுந்து,பாசிப்பயிர் உள்ளிட்ட விவசாய பயிர்கள்  தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு விலை நிலங்களுக்குள் கடந்த இரண்டு நாட்களாக மழை நீர் தேங்கி இருப்பதால், விவசாயப் பயிர்கள் நீரில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது, இதுகுறித்து வருவாய் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்தும்இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் குருத்து பூச்சி மற்றும் படைப்புழுகளுக்கு மருந்து தெளித்த நிலையில் மழையின் காரணமாக பெரிதும் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே அரசு முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுப்பையாபுரம் கிராமத்தில் நீர் வரத்து ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டுசுமார் பரப்பளவில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.