விளாத்திகுளம்,சங்கரலிங்கபுரம்,சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட SP பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், திடீரென விளாத்திகுளம் காவல் நிலைய உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதி காவல் நிலையங்களான விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம்சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் காவல் நிலைய போலீசாருக்கு அவர் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகளை காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்இந்த ஆய்வின் போது விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், விளாத்திகுளம்  ( பொறுப்பு) ஆய்வாளர் விஜயலட்சுமிஅனிதா உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர்.