வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  புதூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள பருத்தியிலிருந்து பஞ்சிணை பிரித்தெடுக்கும் அழகு மற்றும் புதூர் பகுதி விவசாயிகளுக்காக  புதிதாக கட்டப்பட்ட 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பஞ்சினை பிரித்தெடுக்கும் முறை குறித்து கேட்டிருந்தனர்.இந்த ஆய்வின்போதுபுதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி.வனிதா,    துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திரு.முருகப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.மார்ட்டின் ராணி, புதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் செயலர் திருமதி.எழில்அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.