விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த மின் ஊழியர்பலி.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்த கிராம் புளி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் குருநாதன் வயது (28) இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார், இந்நிலையில் இன்று காலை படர்ந்தபுளி தெரு விளக்கு மாற்ற சென்றபோது மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார், இதனையடுத்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குருநாதன் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,இறந்த குருநாதனுக்கு திருமணம் ஆகி கோட்டைச்செல்வி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Vilathikulam
மின்சாரம் தாக்கி ஒப்பந்த மின் ஊழியர்பலி..
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026