தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநில நிதி பகிர்வு ஆணைய நகர்ப்புற சாலைகள் மற்றும் மேம்பாட்டு நிதி திட்டம் கீழ் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த சாலைகளை புதிய தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும்  திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் எட்டையாபுரம் பகுதி மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.