விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் மூலம் மிக்ஜாம் புயலால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள் சேகரிப்பு.  சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலினால் சென்னை மக்கள் உணவு இருப்பிடம் உடை இன்றி   பெரிதும் பாதிப்பிற்கு  உள்ளாகி வருகின்றனர். பல்வேறு சமூக அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள்அரசியல் பிரமுகர்கள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மிக்ஜாம்  புயலால்  பாதிக்கபட்டவர்களுக்கு, அத்தியாவாசிய உணவு பொருள்களை   விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்  தலைமையில் புதூர்நாகலாபுரம், குளத்தூர்,வேம்பார், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  வணிக வளாகங்கள் மற்றும்  கடைகள், பொது மக்களிடம் பிஸ்கட்பாக்கெட், அரிசி, மளிகைப் பொருள்கள்  போன்றவற்றை  வருவாய்துறை அலுவலர்கள்  கிராமநிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், நன்கொடையாக பெற்ற, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.