விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்:"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் ஊராட்சியில் ஆற்றங்கரை, குருவார்பட்டி, ஜமீன்கரிசல்குளம், ஜமீன்கோடாங்கிபட்டி,பி.மீனாட்சிபுரம்,கே.சுந்தரேஸ்வரபுரம், வில்வமரத்துப்பட்டி,கீழவிளாத்திகுளம்,பேரிலோவன்பட்டி,அயன்பொம்மையாபும்   ஆகிய ஊராட்சிகளுக்கு இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு  வேலை உத்திரவு மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு விதைப்பைகளையும் வழங்கி போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டார்.நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,ஸ்ரீனிவாசன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு ,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,  விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், அயன்பொம்மையாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகலட்சுமி, ஜமீன்கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி,ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் குருவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி செந்தில்வேல், கீழவிளாத்திகுளம்   ஊராட்சி மன்ற தலைவர் நவநீதகிருஷ்ணன், வில்வமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பொண்ணு, கே.சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் போஸ்,P.மீனாட்சிபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பெருமாள்சாமி பேரிலோவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பெத்தனாட்சி , விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.