தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில்பெருந்தலைவர் காமராஜர் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 5 வகுப்பறை கட்டிடங்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்துவிளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பேபி லதா, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரனாராயணன், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் திமுக சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.