எட்டையபுரம் அருகே  இராமனூத்து அரசுப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!


தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் பாரதியாரின் 144 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி இடைநிலை ஆசிரியர் இந்திரா தலைமை தாங்கினார்.பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் வெண்ணிலா முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் பாரதியாரைப் போன்று வேடமணிந்து  அவரின் சிறப்புகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மாணவ,மாணவியர்கள் பாரதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக பாரதியார் பற்றிய கட்டுரை பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.விழா முடிவில் வாணி நன்றி கூறினார்.