விளாத்திகுளத்தில்  கனரா வங்கியின் 52வது புதிய கிளை திறப்பு விழா!  தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் மதுரை  சாலையில் கனரா வங்கி 52 வது  கிளையை மதுரை பொது மேலாளர் கிருஷ்ணமோகன் ரிப்பன் வெட்டி திறந்து  வைத்தார். இந்நிகழ்வில் தூத்துக்குடி உதவி பொது மேலாளர் ஜக்கல சுரேந்திர பாபு, விளாத்திகுளம் கனரா வங்கி மேலாளர் மாரிச்செல்வி,  மண்டல மேலாளர் கௌசல்யாதேவி , நாகேஷ், துணை மேலாளர் சரண்யா,  எழுத்தர் ஜீவா, நகை மதிப்பீட்டாளர் சிவகுமார்,   சிறப்பு விருந்தினர்களாக பேரூராட்சி தலைவர்  சூர்யா அயன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி,  அன்பில் நாராயணமூர்த்தி,  ஒப்பந்ததாரர் பாண்டியராஜன்,  தொழிலதிபர் கந்தவேல் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விளாத்திகுளத்தில் ஸ்டேட் பாங்க், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கரூர் வைசியா, தமிழ்நாடு பாண்டியன் கிராம பேங்க், ஹெச்டிஎஃப்சி, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இருக்கும் நிலையில் தற்போது கனரா வங்கியின் புதிய கிளையும் பிளாத்தி வரும் பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.