விளாத்திகுளத்தில் தமிழ்நாடு  கிராம வருவாய் ஊழியர் சங்கம் சார்பில்  கிராம உதவியாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.   தூத்துக்குடி  மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம வருவாய்  ஊழியர் சங்கம் சார்பில்  கிராம உதவியாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வாரிசு அடிப்படையில் கிராம உதவியாளர் பணி மீண்டும்  வழங்கிட வேண்டும் என்றும் , கிராம உதவியாளர்களாக  பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளின் எரிபொருள் படியை மீண்டும் வழங்கிட வேண்டும்  போன்ற 14  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிராம உதவியாளர்  வட்ட தலைவர் சுப்புராஜ் தலைமையில் நடைபெற்றது, மாவட்டத் தலைவர் முருகராஜ் முன்னிலை வைத்தார், மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன் சிறப்புரை   ஆற்றினார், வட்டத் தலைவர் மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினார், தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.